2025 ஜூன் 21, சனிக்கிழமை

37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதுறை திறப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் யு.என்.எச்.சி.ஆர். இன் நிதியுதவியுடன் யாழ். சுழிபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடி இங்குதுறை இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தன கலந்துகொண்டு இறங்கு துறையினை திறந்துவைத்தார்.
 
குறித்த பகுதி அண்மையில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் மக்கள் மீன்பிடித்தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இப்பகுதியில் இறங்கு துறை ஒன்று அமைத்துத் தருமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 37 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை கடற்தொழில் நீரியல்வள அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த இறங்குதுறைக்குச் சென்ற சவுக்கடி வீதி மற்றும் இளைப்பாறும் மண்டபமும் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் கெட்டியராட்சி, யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் கணேசமூர்த்தி மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .