2025 ஜூன் 19, வியாழக்கிழமை

500 வீதி விளக்குகளை பொருத்தியுள்ளோம்: சுகிர்தன்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வீதிகளுக்கு கடந்த 2 வருடங்களில் 500 இற்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

சபையின் நிதியிலிருந்து வீதி விளக்குகள் கட்டம் கட்டமாக பிரதான வீதிகள் உட்பட மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் 350 வீதி  விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் இதுவரையில் 250 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .