2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அடித்துக் காயப்படுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற  நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X