2025 ஜூலை 16, புதன்கிழமை

‘அடக்கியாளும் அரசமைப்பு விமோசனத்தை தராது’

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஓர் அரசமைப்பும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது. மாறாக, முற்று முழுதாக சட்டப்படி வர்ணிக்கப்பட்டு, தமிழருக்குத் தரப்படும் அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்தான் நாம் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழமுடியும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

 “உகந்த கேள்விகளைக் கேட்டு அவற்றை அலசி ஆராய்வதால் கூட்டத்தில் இருந்து செவிமடுப்போர் நன்மை பெறுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்கின்றார்கள். அந்த வகையில், 5 விடயங்கள் இன்று ஆராயப்பட இருக்கின்றன” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .