2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அதிபர் கடமையில் இருக்கும் போது பதவிக்கு விண்ணப்பம் கோரிய வழக்கு தள்ளுபடி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் கடமையில் இருக்கும் போது அப்பதவிக்கு பிறிதொரு அதிபரை நியமனம் செய்ய விளம்பரம் மூலம் கோரியமை தொடர்பில் அதிபர் தொடர்ந்த வழக்கில், விளம்பர அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்வதாக எதிராளிகளின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தமையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அதிபர் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, விளம்பர அறிவித்தலை மீள்பெறுதலுக்கான அனுமதியை வழங்கி நீதிபதி மா.இளஞ்செழியன், இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று யாழிலுள்ள பத்திரிகையொன்றில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்துக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக விளம்பரம் வெளியிடப்பட்டது.

தான் கடமையில் இருக்கும் போது, தனக்குத் எவ்வித அறிவித்தலும் வழங்காமல் இவ்வாறான விளம்பரம் செய்தமை தொடர்பில் அதிபர் நாகராசா மகேந்திராஜா, வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட ஆறு பேருக்கு எதிராக ஜூலை மாதம் 9ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை வழக்குத் தாக்கல் செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .