Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பூகம்பம் ஏற்பட்ட நாடு என்னவென்று கூடத் தெரியாமல் நீர் எல்லாம் வரலாற்று ஆசிரியராக இருக்கின்றீர்களா? என்று அதிபர் ஒருவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை ஒருவரை திட்டிய சம்பவம், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பாடசாலையொன்றில் வியாழக்கிழமை (17) நடைபெற்றுள்ளது.
சிலி நாட்டில் 8.30 ரிச்சர்ட் அளவில் புதன்கிழமை (16) பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வரலாற்று ஆசிரியர் அறிந்து வைத்திருக்கின்றாரா? என சோதிக்க எண்ணிய அதிபர், ஒரு மாணவனை அழைத்து, இன்று புதன்கிழமை எந்த நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது என வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுவருமாறு கூறியுள்ளார்.
அதிபர் கூறியவாறு மாணவனும் ஆசிரியையிடம் சென்று புதன்கிழமை (15) எந்த நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது என்று கேட்டுள்ளான். அதற்கு தெரியாது என்ற பதிலையே வரலாற்று ஆசிரியை மாணவனிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட அதிபர், மாணவர்களுக்கு மத்தியில் வைத்து, வரலாற்று ஆசிரியராக இருந்தும் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள், செய்திகள் பற்றி தெரியாதுள்ளீர்கள் என்று ஏசியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago