2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அமைதிப் படையினருக்கு அஞ்சலி

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கையில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு, யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

70ஆவது இந்திய குடியரசு தினத்தையிட்டு பலாலியில் அமைந்துள்ள குறித்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு திங்கட்கிழமை (15) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் மற்றும் இராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போது, ஓப்ரேசன் பவன் 10ஆவது பரா கொமாண்டோக்கள் மற்றும் 13ஆவது சீக்கிய ஒளி காலாட்படையினைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஹெலிகொப்டரில் இருந்து தரையிறங்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X