2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அரியாலையில் எலும்புக்கூடுகளும் மீட்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்.அரியாலை முள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை (16) கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், பெண்கள் அணியும் ஆடைகள், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்பன சனிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரன் ஆகிய இருவரின் மேற்பார்வையின் கீழ் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் எலும்பு கூடுகள் மற்றும் தடய பொருட்களின் கால எல்லையை அறிவதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இதன்போது, மேலதிக எலும்புகளும் மீட்கபட்டுள்ளன.

குறித்த பகுதியில் எலும்பு கூடு மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பை, பென்சில், குடை, இரு விதமான செருப்பு, ஆகியன வெள்ளிக்கிழமை (16) கண்டுபிடிக்கப்பட்டன.

போர்ச்சூழலில் இப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X