2025 ஜூன் 28, சனிக்கிழமை

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வேண்டும்: டக்ளஸ்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள், இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள், செய்யப்படாதவர்கள் மற்றும்  நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று, ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைப்போன்று, வெளிவரவுள்ள ஜெனீவா முடிவுகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும்  உள்ளடக்கி, அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது, தொடர்ந்தும் காலதாமதமாகி வருவதானது, எமது மக்களிடையே கசப்பான உணர்வுகளையே தொடர்ந்தும் வளர்த்து வருகிறது. எமது மக்களின் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் மூலமே, எமது மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான நம்பிக்கையை வளர்க்க இயலும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி அவதானம் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .