2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அரசியல் கைதிகளை விடுதலை செய்த பின் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமலும் காணாமல் போன எமது உறவுகளுக்கு ஒரு முடிவு காணாமல், தெற்கில் சுதந்திர தின கொண்டாட்டங்களை மேற்கொள்ள இருக்கின்ற இந்த அரசாங்கம், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து விட்டு சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய தார்மீக உரிமை இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடம் முடிவடைந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுடைய வாழ்வியல் உரிமைகளில் எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்று என்கின்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுவிட்டது.

இதன் காரணத்தினால் இந்த சுதந்திர தினத்திலாவது சிங்கள ஏகாதிபத்திய சிந்தனைத்துவத்தை துறந்து, தமிழ் மக்களுக்கு கருணை காட்டக்கூடிய அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடிய தேவை இருக்கின்றது.

ஏன் என்றால் ஒரு மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரங்களை கையாள வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு உள்ளது என்பதையும் நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X