2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆடைக்கட்டுப்பாட்டு தளர்வினார் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆலய புதிய நிர்வாக சபை தெரிவித்தது.

மருதடி விநாயகர் ஆலயம் 300 மில்லியன் ரூபாய் செலவில் கருங்கற் கோயிலாக அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின்னர், ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மருதடி விநாயகர் ஆலயத்துக்கு வருகை தரும் பெண்கள், சேலை அல்லது நீளப்பாவடை அணிந்து ஆலயத்துக்கு வர வேண்டும் எனவும் சல்வார் உள்ளிட்ட நவநாகரீக ஆடை அணிந்து வருபவர்கள் உட்செல்ல முடியாது எனவும், ஆண்கள் வேட்டியுடன் மாத்திரம் ஆலயத்துக்குள் செல்ல முடியும் எனவும் ஆலயத்தின் பழைய நிர்வாகத்தினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதனால், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்ததுடன், வழமையாக ஆலயத்துக்கு வருகை தரும் பெருமளமானவர்கள் வருகை தராமலும், வெளியில் நின்று தரிசனம் செய்தும் வந்தனர்.

இது தொடர்பில் அறிந்த யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள சிக்கல் மற்றும் ஆலய விதிகளிலுள்ள முரண்பாடுகளை நீக்க புதிய நிர்வாக சபையை நிர்வகிக்க எண்ணினார். 

இதன்படி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை கடந்த வாரம் மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடத்தினார்.

இத்தேர்தலில் பழைய நிர்வாகத்தைச் சேர்ந்த மூவர் புதிய உறுப்பினர்கள் நால்வர் என 7 பேர் கொண்டு புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது. புதிய நிர்வாக சபை தமது முதல் செயற்பாடாக ஆடைக் கட்டுப்பாட்டு தொடர்பில் தளர்வை மேற்கொண்டது.

இதனால் தற்போது ஆலயத்துக்கு பெருமளவு பக்தர்கள் செல்வதுடன், ஆலயத்தின் வருமானமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .