2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2016 ஜூலை 03 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி வடக்கு, வல்லை பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த  அச்சுவேலி தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமையாற்றும் குடும்பிநாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டனர். மேற்படி இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளுக்காக சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X