Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது.
இடம்பெயர்ந்து யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் தொடர்பான ஆய்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அந்த ஆய்வு அறிக்கையும் இன்றைய தினம் வெளியிடப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் வடமாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
6 hours ago
6 hours ago