2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்தியா தலையீடு வேண்டும்: அடைக்கலநாதன்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை முதன் முதலில் அங்கிகரித்த நாடு என்னும் வகையில், இந்தியாவின் காத்திரமான தலையீட்டை நாம் எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை (30) விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்தியாவின் வலுவான தலையீடின்றி எமக்கானதொரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற முடியாதென்பதையும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். அந்த வகையில், இன்றைய சூழலிலும் இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடு' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மீதான இரண்டு பிரேரணைகளுக்கு,  இந்தியா ஆதரவாக வாக்களித்ததன் மூலம், அமெரிக்காவினால் இலங்கையின் மீதான மென் அழுத்தங்களை முன்கொண்டு செல்ல முடிந்தது. அவ்வாறு தொடரப்பட்ட அழுத்தங்கள் இன்று ஒரு கட்டத்தை அடைந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் ஒரு உள்ளக பொறிமுறையின் மூலம் தான் விடயங்களை பாசீலிக்க முடியுமென்று கூறிவருகிறது. ஆனால் எமது மக்களுக்கோ உள்ளக பொறிமுறை ஒன்றில் நம்பிக்கையில்லை.

அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக தலைமை என்னும் வகையில் மக்களின் அச்சங்களை, கேள்விகளை புறக்கணித்தும் நாம் செயலாற்ற முடியாது. எனவே எமது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்தியா காத்திரமானதொரு தலையீட்டை செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

நாம் அவ்வாறு எதிர்பார்த்தாலும் கூட அது ஒருபோதும் ஈடேறப்போவதில்லை. இந்தியா ஏற்றுக் கொண்ட, எமது தாயகமான இலங்கையின் வடகிழக்கில், எமது மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கு ஏற்றதான ஒரு நியாயமான அரசியல் தீர்வை, எங்களது மக்களுக்கு உரித்தாக்க வேண்டும் என்பதேயே நாம் கோருகின்றோம் என்று என்று தெரிவித்துள்ள அவர். அதற்காக கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக கையாளுவதற்கு இந்தியா எங்களுடன் இருக்க வேண்டும் என்றும் இந்தியாவுடன் நாம் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .