2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிரிவரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் இந்த மீனவர்களை செவ்வாய்க்கிழமை (22) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .