2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் தமிழகம் சென்றடைந்தனர்.

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும், செவ்வாய்க்கிழமை (27) மாலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

இந்த 4 இந்திய மீனவர்களும், கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி எழுவைதீவு மேற்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகாரிகள், மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்திய போது, மீனவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுத்தலுக்கமைய கடந்த 23 ஆம் திகதி மேற்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களை பொறுப்பேற்ற யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், காங்கேசன்துறை கடற்படையினரின் உதவியுடன் அவர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய விசைப்படகு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X