2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் கோரிக்கை கடற்றொழில் சங்கங்களால் நிராகரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஷ் மதுசங்க

இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது,

மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.  இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம்.

வடக்கிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் கடற்றொழில் சங்க தலைவர்களுடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரிகள் குழு பங்கேற்றால் அது செல்லுபடியான பேச்சுவார்த்தையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரம் மற்றும் சட்ட ரீதியற்ற பேச்சுக்களை முன்னெடுப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் இரண்டு நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாட்டு பிரதமர்களால் பேச்சுநடத்தி தீர்க்கமுடியாத இந்த பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளால் பேச்சுநடத்துவது இருட்டில் நடப்பதற்கு சமமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவ விவகாரம் தொடர்பில் அரச தலைவர்கள் இந்தியாவில் நடத்திய பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் இலங்கை கடற்றொழில் சங்கங்களுக்கு இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் வருந்ததக்க செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்;மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் தென்னிலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளையும் இணைந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .