Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.
மேற்படி மீனவர்கள் விசைப்படகொன்றில், எழுவைதீவுக்கு மேற்கே 9 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago