2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மைய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகும் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மீனவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X