2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

George   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (24) அதிகாலை காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாகப்பட்டிணம் பகுதியிருந்து 2 படகுகளில் வருகை தந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற இந்த மீனவர்களை, ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .