2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 17பேர் கைது

George   / 2016 ஜூலை 06 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் நேற்று(05) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தமிழ்மிரருக்கு இன்று(06) தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் அணைவரும் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் பகுதியினை சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

இரண்டு விசைப்படகுகளில் வந்து, பருத்தித்துறைக்கு கிழக்கே 25கடல்மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். 

இதன்போது, பருத்துறை கடலோரத்தில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைதான மீன்பிடி விசைப்படகுகள் இரண்டு மற்றும் சான்றுப்பொருட்களை காங்கேசன்துறை கடற்படைதளத்தில் தடுத்து வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக விசாரணையின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X