2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 11 பேரை, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு தென்மேற்கே 5 கடல் மைல் தொலைவில் வைத்து, ரோந்து சென்ற காரைநகர் கடற்படையினர், சனிக்கிழமை (19) மாலை இவர்களை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைதான மீனவர்களும் அவர்களின் படகுகள் இரண்டும் காங்கேசன்துறை கடற்படைதளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X