2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால், இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதி 2 விசைப்படகுகளுடன் நுழைந்து நெடுந்தீவுக் கடற்பரப்பினுள் மீன்பிடித்த 9 இந்திய மீனவர்களும் ஜனவரி 17ஆம் திகதி ஒரு விசைப்படகுடன் கைதான 3 இந்திய மீனவர்களுமாக  இந்திய மீனவர்கள் 12 பேரின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X