Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும், எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, படகில் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிந்த இந்த மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்தனர்.
கடற்படையினரிடமிருந்து மீனவர்களைப் பொறுப்பேற்ற யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்வதையடுத்து, இந்த மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago