2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வியாபாரிக்கு அபராதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

அத்துடன், வியாபாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடவை மற்றும் சல்வார்களை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.

மாதகல், சகாயபுரம் பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு சிவகாசியைச் சேர்ந்த அழகர்சாமி மனோகரன் என்பவர் இளவாலைப் பொலிஸாரால் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த புடவை, சல்வார்களும் கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X