Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில், ரயலட்பார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (07) உத்தரவிட்டார்.
பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணியால், தாக்கல் செய்யப்பட்ட எழுத்து மூல விண்ணப்பம் தொடர்பான விசாரணைகள் இன்று (07) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெறவில்லை என நீதவானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து நீதவான் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார், ரயலட்பார் நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago