2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, ஊரிக்காடு விஜயபாகு காலாட்படையணி இராணுவமுகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலிபடைத் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹியத்தக்கண்டி சந்தன்மல்ல பகுதியை சேர்ந்த அலுவத்த மங்கள திசாநாயக்க (வயது 27) என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

வியாழக்கிழமை (16) இரவு வழமை போன்று சக சிப்பாய்களுடன் உணவு அருந்தி விட்டு படுக்கைக்கு சென்ற இவர் அதிகாலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X