2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரும்பு கம்பிகளை திருடிய இராணுவத்தினர் கைது

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி ஏ-9 வீதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையின் இரும்பு கம்பிகளை திருடிய 6ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 8 இராணுவத்தினரை சனிக்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

விளம்பர பதாகையின் இரும்பு கம்பிகளை சில நபர்கள் திருடுவதை வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் அவதானித்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் இராணுவத்தினர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X