2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இளைஞர்கள் மீது கருக்குமட்டைத் தாக்குதல்

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

மறவன்புலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் கருக்குமட்டையால் தாக்கியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மறவன்புலம் பகுதியைச் சேர்ந்த சபாநாதன் தமிழகன் (வயது 20), தனமோகன் சுதர்சன் (வயது 21) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இரு இளைஞர்களும் வீதியால் நடந்துசென்று கொண்டிருக்கும் போது, இவர்களை வழிமறித்த சிலர், கருக்கு மட்டையால் சரமாரியாகத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X