2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இளைஞர்கள் மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொது இடத்தில் ஒன்றாக கூடி நின்ற குற்றச்சாட்டில் கைதான இளைஞர்கள் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.

உடுப்பிட்டி, இமையாணன் பகுதியில் பாடசாலைவிடும் நேரம் தேவையற்று வீதியில் கூடி நின்ற மூவரை கடந்த 17ஆம் திகதி வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் எதிராக வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .