2025 ஜூன் 25, புதன்கிழமை

ஈ.பி.டி.பி வேட்பாளர் மீது தாக்குதல்

Editorial   / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை - தம்பாட்டி வேட்பாளர் மீது, சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதல்  மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை - தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்ற கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .