2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உடுவில் மாணவர் போராட்டம்: பலவந்தமாக இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரம் சுரேன்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டு, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 மாணவிகள் தற்போது மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X