2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உழவு இயந்திரங்கள் பழுது : நிலத்தை பண்படுத்துவதில் நெருக்கடி

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் உள்ள உழவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதன் காரணமாக காலபோக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகள் நிலத்தினைப் பண்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கமநல சேவை நிலையங்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவை மூலம் கமநல சேவை நிலையங்கள் விவசாய நிலங்களை பண்படுத்தி வந்தன.

கமநல சேவை நிலையங்களில் உள்ள உழவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதன் காரணமாக அவை காலபோக நெற்செய்கையில் நிலப் பண்படுத்தலில் ஈடுபடுத்த முடியாது. இதனால் விவசாயிகள் நிலப்பண்படுத்தலில் தனியார் உழவு இயந்திரங்களை கூடுதலான நிதியை வழங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது.

கமநல சேவை நிலையங்களில் பழுதடைந்துள்ள உழவு இயந்திரங்களை வேகமாக திருத்தம் செய்து, எதிர்வரும் காலபோகத்தில் நிலப்பண்படுத்தலுக்கு பயன்படுத்த உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X