Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா
எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் பதவியேற்ற பின்னர், முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, வியாழக்கிழமை (10) காலையில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
'தந்தை செல்வா எதனை கூறினாரோ அதனை உரிய முறையில் அரசாங்கம் வழங்குமாக இருந்தால் அந்த தீர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக' இதன்போது சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான எஸ்.பரஞ்சோதி, யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி, நிர்வாகச் செயலாளர் எஸ்.குலநாயகம், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் த.நடனேந்திரன், சிக்கனகடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சி.இலகுநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025