2025 ஜூன் 25, புதன்கிழமை

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்: சி.வி நம்பிக்கை

George   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நாங்கள் எதிர்பார்த்து செய்த நடவடிக்கைகள் நடைபெறுவது போன்று உள்ளதாகவும், எதிர்பார்த்தது போன்று பலன்கள் கிடைக்கும் என நம்புவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டமை தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "வடமாகாண சபையில் நாங்கள் நிறைவேற்றிய பிரேரணையை மனதில் நிறுத்தி, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைச் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளமையை நாங்கள் வரவேற்கின்றோம்" என்றார்.

"சர்வதேச பொறிமுறை அமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூபன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் ஆகியோருக்கு தெரிவித்திருந்தோம். அதன் எதிரொலியாகவே ஐ.நா சபையில் அறிக்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக அமையவுள்ளது எனத் தோன்றுகின்றது" என்றார்;.

"சர்வதேச மனித உரிமை ஆணையகம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சில ஆணித்தரமான விடயங்களை வெளியிட்டிருப்பது நன்மையாக இருக்கும் என நம்புகின்றோம். ஐ.நா அறிக்கை தொடர்பில் பிரேரணையொன்றை தாயாரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சட்டத்தரணிகள் மற்றும் உறுப்பினர்களுடன் துணையுடன் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், அங்கத்துவ நாடுகள் சொல்லும் விடயங்களை செய்யவேண்டிய கட்டாயத்தில் ஐ.நா சபை இருப்பதால், பிரேரணையொன்று அவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது. பிரேரணையானது சர்வதேச நீதிபதிகள், வழக்கு நடத்துபவர்கள் ஊடாக சர்வதேச சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையாக உருவாக்கப்படும் என்ற ரீதியில் அமையவேண்டும" என அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .