Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
வடபகுதி கடல் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கோரி, எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாக அவரது அலுவலகத்தில், வியாழக்கிழமை (17) நடைபெற்ற மீனவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் முடிவில், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எல்லை தாண்டும் மீனவர்கள் தொடர்பில் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது,
மாற்றுத்தொழில்களைச் செய்வதாக இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 'சுண்டிக்குளம், தாளையடி, மயிலிட்டி போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டு அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லத் தயாராக இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago