2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஐ.நா அறிக்கையின் மூலம் வந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது: டக்ளஸ்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  இலங்கை தொடர்பான அறிக்கையை, தமிழ் மக்களின் இழப்புக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் பரிகாரம் தேடவும் உண்மைகள் கண்டறியவும்,  உரிய நியாயம் கிடைக்கவும், அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும் தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை  தீர்த்துக்கொள்ள இவ்வாறு கிடைக்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை, தமிழ்த் தலைமைகள் தவறவிட்டுள்ளனர் என்றும் அவர கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆகை;குழு விடுத்துள்ள, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 'போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள், சர்வதேசப் பங்களிப்புடன் ஒரு உள்ளகப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட வேண்டுமென அந்த அறிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச விசாரணையா? அல்லது உள்ளக விசாரணையா? என்ற தேவையற்ற தர்க்கத்தில் ஈடுபட்டுக் காலத்தை வீணடித்து விடக்கூடாது. ஏனென்றால் முன்னர் அரசியல் வழிமுறைப் போராட்டங்கள், ஆயுத வழிமுறைப் போராட்டங்கள் என்பவற்றைக் கடந்து, தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.  இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள இன்னொரு வாய்ப்பாகவே, மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையை தமிழ் மக்களின் தலைமைகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் சரியான வகையில் அணுக வேண்டும்' என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவசியமான முயற்சிக்கு சக தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் நலன்சர்ந்து செயற்படும் அனைத்துப் பொது அமைப்புக்கள் ஆகியோரை, பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவமாறு தமிழ் மக்களின் சார்பாகப் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றும் டக்ளஸ்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .