Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று (29) சாட்சியமளித்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது, தொடர்ந்து சாட்சிமளித்த அந்த முதியவர் கூறியதாவது,
'எனது மகன் சத்தியமூர்த்தி, மருமகள் கவிதா, பேரப்பிள்ளைகளான தமிழ் முகிலன், தமிழ் அன்டன், இறைநிலா மற்றும் நான், வட்டுவாகல் பகுதியிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 2009 மே மாதம் 18ஆம் திகதி சென்றோம். இதன்போது, புலிகள் அமைப்பில் ஒருநாளேனும் இருந்தவர்களை வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் மரக்காலையில் முகாமையாளராக கடமையாற்றிய காரணத்தால் எனது மகன் சரணடைந்தார். அவரை விட்டு வரமாட்டேன் என மருமகளும் அவரது குழந்தைகளுடன் சென்றார். அவர்கள் ஐவரையும் பஸ் ஒன்றில் ஏற்றினார்கள். என்னை, முகாமுக்குச் செல்லுமாறும் விசாரணை முடிய தாங்கள் வருவோம் என்றும் கூறிச் சென்றனர். ஆனால் இன்றுவரை அவர்கள் திரும்பிவரவில்லை' என்று சாட்சியமளித்தார்.
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago