Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் தர்சினி (வயது 36) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
10 நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11), மீண்டும் காய்ச்சல் காரணமாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago