2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒரு வித காய்சலினால் ஆறு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஒரு வித காய்ச்சலுக்கு உள்ளான தாய் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வாதரவத்தை புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் இலட்சணகுமாரி (வயது 48) என்ற ஆறு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். பின்னர் அங்கிருந்து 13ஆம் திகதி யாழ். போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்திசாலை தகவல்கள் தெரிவித்தன.

மரணவிசாரணைகளை, யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X