2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொக்குவிலில் ஐயர் வீட்டிலும் கொள்ளை

George   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில் கிருபாகரசுவாமி (புதுக்கோவில்) ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் வியாழக்கிழமை (17) அதிகாலை, 6 ½ பவுண் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகள் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .