Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
வடமாகாணத்தில் செயற்படும் 2 ஆயிரம் கூட்டுறவு அமைப்புக்களின் சொத்துக்களின் விவரங்களும் தகவல்களும் நிரல்படுத்தப்பட்டு கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
அச்சுவேலி கிராமிய வங்கியின் புதிய கருமபீடத்தின் திறப்பு விழா, ஆவரங்காலில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கூட்டுறவு அமைப்புக்கள் எந்த நோக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவு செய்து, பொது மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். வடமாகாணத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் 30 சதவீத சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுப்படி என்பவற்றை ஊழியர்களுக்கு வழங்க முடியாமல் திண்டாடுகின்றன' என்றார்.
'யாழ். மாவட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகங்களில், குறைபாடுடைய நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்கப்படும். 25 வருடங்களுக்கு மேல் நிர்வாகத்திலிருந்து கொண்டு, சங்கத்தின் இயல்பு நிலைச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக சிலர் இருந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago