Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன், நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம், குருநகர் கடற்பகுதியில் இருந்து கடந்த 30ஆம் திகதி பாலைதீவுக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் காணாமல் போயிருந்த நிலையில் நேற்றுச் சனிக்கிழமை (03), பாலைதீவுக் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், மகேந்திரபுரம் தூண்டிப் பகுதியினைச் சேர்ந்த பிறான்சிஸ் மக்காரியோஸ் (வயது 39) எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாட்டுப்படகு ஒன்றுடன் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்படி உயிரிழந்த மீனவருடன் சேர்த்து மூவர் மீன்பிடிப்பதற்காக, பாலைதீவுக் கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சீரற்ற காலநிலையினால் மேற்படி மீனவர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கியிருந்தது. ஒருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், இருவர் காணாமல் போயிருந்தனர். அதில் பிறான்சிஸ் மக்காரியோஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன கஸ்தூரி பத்மசிறிதர் (வயது 50) என்ற நபரை தொடர்பாக, கடற்படையினரும், மீனவர்களும் கடலில் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago