2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போனோரின் தகவலை வெளியிடக்கோரி யாழில் ஆர்பாட்டம்

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

காணாமல் போனோரின் தகவலை வெளியிடக்கோரி யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளின் நிலை என்ன என்பதை இப்போதாவது வெளிப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 'இப்போதாவது காணாமல் போன சகலரது தகவல்களையும் வெளியிடு' என்ற வாசகம் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .