2025 ஜூலை 23, புதன்கிழமை

குதிரை ஓடியவர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி மத்திய கல்லூரியில் ஆள்மாறாட்டம் மேற்கொண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவரையும் அவருக்கு உதவியவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் உதவியாளராகக் கடமையாற்றும் 39 வயதுடைய ஒருவர் க.பொ.சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார்.

பரீட்சை ஆரம்பமான நாட்கள் தொடக்கம், கண்டாவளை, புளியம்பொக்கனைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன், அவருக்குப் பதிலாக கடந்த 5 பாடங்களுக்கான பரீட்சைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து திங்கட்கிழமை (14) நடைபெற்ற கணித பாடப் பரீட்சையையும் இவ்வாறு எழுதிய போது, பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டு, பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து, பரீட்சைக்கு விண்ணப்பித்தவர், பதிலாக எழுதியவர் ஆகியோர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் பரீட்சை அனுமதியட்டையை உறுதிப்படுத்திய சமாதான நீதவானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

5 நாட்கள் பதில் நபர் பரீட்சை எழுதியமை தொடர்பில் பூநகரி கோட்டக்கல்வி மற்றும் கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகங்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .