2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காதலனுக்கு திருமணம் : காதலி முறைப்பாடு

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி 15 வயதிலிருந்து தன்னுடன் நெருக்கமாக பழகி தற்போது தன்னை ஏமாற்றியுள்ளதாக, யுவதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள திருமணத்தை நிறுத்தி தன்னுடன் இவ்விளைஞனை சேர்த்து வைக்குமாறும் அவர் இந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து, யுவதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X