2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கோப்பாய் கோமகனின் 56 ஆவது நினைவுதினம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் கோமகன் என அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கத்தின் 56ஆவது நினைவு தினம் நீர்வேலி வாழைப்பழச் சங்கத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களாக இமானுவல் ஆர்னோல்ட், பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, வன்னியசிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், இந்நிகழ்வில் வைத்து பரஞ்சோதியின் குறித்தொதுக்கப்பட்ட வடமாகாண சபை நிதியிலிருந்து வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .