Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (15) உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாள்குளம், வவுனிக்குளம் பகுதியினை சேர்ந்த சாள்ஸ் ஜேந்தினி (வயது 25) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 13ஆம் திகதி, மல்லாவி பிரதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு 14ஆம் திகதி மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago