2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காய்சலினால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு, வாழைச்சேணை பகுதியைச் சேர்ந்த விநாயகம் பஞ்சாட்சரம் (வயது 32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்காக முல்லைத்தீவு, அலம்பில் பகுதியில் தங்கி நின்ற குறித்த நபர், கடந்த 30ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செம்மலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந் நிலையிலேயே, ஞாயிற்றுக்கிழமை (07) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X