2025 ஜூன் 25, புதன்கிழமை

காயமடைந்தவருக்கு நட்டஈடு வழங்க உத்தரவு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கவனக்குறைவாக மோட்டார் சைக்கிளை செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய ஓட்டுனருக்கு 6,000 ரூபாய் அபராதம் விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பா.சுப்பிரமணியம், காயமடைந்த நபருக்கு 30,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறு வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

கொடிகாமம் இராமவில் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மோட்டார்; சைக்கிள், துவிச்சக்கரவண்டி விபத்தில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த, மீசாலை பகுதியினை சேர்;ந்த நபர்; படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இதன்போது, வழங்கப்பட்ட தீர்ப்பில், கவனக்குறைவாக மோட்டார்; சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பதில் நீதவான் அபராதம் விதித்ததுடன், நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டார்;.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .